எரிபொருள் தட்டுப்பாடு – ருவான்வெல்ல மக்கள் ஆர்ப்பாட்டத்தில்

கேகாலை மாவட்டம் ருவான்வெல்ல பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ருவான்வெல்ல எரிபொருள் நிலையத்தில் சிறு பிள்ளைகளோடு பாதையில் பல மணி நேரம் காத்திருந்த மக்களுக்கு எரிபொருள் கிடைக்காமையால் இளைஞர்கள் உட்பட மக்கள் ஆத்திரமடைந்து பாதையை மறைத்து பாதையில் தீ வைத்து கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு 11 மணிக்கு ஆரம்பமாகி இன்று அதிகாலை வரை தொடர்ந்தது இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

Related Articles

Latest Articles