இலங்கையின் முன்னணி மற்றும் பாரிய கோழி இறைச்சி தயாரிப்பாளர்களான கிரிஸ்புரோ நிறுவனம் தமது இணையத்தளத்தை மறுவடிவமைப்பு செய்து டிஜிட்டல் தொழில் நுட்பதிறனூடாக தமது ஏற்றுமதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
மறுவடிவமைப்பு செய்து புதுப்பிக்கப்பட்ட புதிய கிரிஸ்புரோ இணையத்தளம் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப திறன்களுக்காகவும் பாவனையாளர்களின் வசதிகளுக்காகவும் பலவசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
தமது புதிய இணையத்தளத்தில் கிரிஸ்புரோவுடன் கொடுக்கல் வாங்கல் செய்யும் அனைத்து பிரிவினரதும் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு தேவையான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதுடன் ஏற்றுமதி துறையில் அதிகமாக ஈடுபட்டுள்ள கிரிஸ்புரோ நிறுவனம் இந்த இணையத்தளத்தில் அதற்கான வசதிகளை வழங்கியுள்ளது.
கிரிஸ்புரோவின் இலச்சினை வாழ்வாதாரமாக மாறியுள்ள இலங்கை கோழிப் பண்ணை தொழிலை சீராக நடத்திச்செல்வதற்கான தேவை மற்றும் ஏற்றுமதி சந்தையில் பிரவேசமும் இந்த மறுவடிவமைப்பு செய்யப்பட்ட புதிய இணையத்தளத்தின்மூலம் தெளிவாக தெரிகின்றது.
‘கிரிஸ்புரோ தயாரிப்பின் விசேடத்தன்மை மற்றும் நிறுவனத்தின் நிலையான வர்த்தக முறைமைகள் குறித்து தெளிவான புரிந்துணர்வு எமது வாடிக்கையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் மற்றும் ஏனைய பிரிவினருக்கும் இந்த இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொடுக்கப்படுவதுடன் இந்த புதிய இணையத்தளத்தில் கிரிஸ்புரோ பயணத்தின் ஒரு திரும்பு முனையாக அமையும் என்பதே எனது கருத்தாகும்.
மறுவடிவமைக்கப்பட்ட இணையத்தளமானது கிரிஸ்புரோ இலச்சினையின் உட்பார்வை மற்றும் அதன் நடவடிக்கைகளை சரியாக பிரதிபலித்துக்காட்டக்கூடிய தொடர்பாடல் செயல்பாட்டு முறையாக இருப்பதுடன் ஏற்றுமதி சந்தர்ப்பத்தை பலப்படுத்தி தேசிய வருமானம் நாட்டிற்குள் பெருக்கெடுத்து வருவதை அதிகரிப்பதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவது எமது நீண்டகால நோக்கமாக உள்ளது என கிரிஸ்புரோவின் சிரேஷ்ட விற்பனை முகாமையாளர் அமோரேஸ்செலர் தெரிவித்துள்ளார்.
கிரிஸ்புரோ நிறுவனம் மத்திய கிழக்கு வலை குடாபிராந்தியத்தில்தமது 30தொன் உற்பத்திப் பொருட்களை முதலாவதாக ஏற்றுமதிசெய்த இலங்கையின் முதலாவது நிறுவனமாகவும் கிரிஸ்புரோ திகழ்கின்றது. அத்துடன் மேலும் கோழி இறைச்சிகளை தொடர்ந்து மாலைதீவுக்கு ஏற்றுமதிசெய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இலங்கையில் கோழிப் பண்ணை தொழில் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு விசேடபங்களிப்பை வழங்குவதுடன் கால் நடைவளத்துறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6 ஆகும்.
அண்மையில் கோழிப் பண்ணை தொழில் விவசாயதுறைக்காக குறிப்பிடத்தக்கபங்களிப்பை வழங்கியுள்ளது. அத்துடன் இலங்கையில் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கு கோழி வளர்ப்பு தொழில் தற்போது உகந்த ஒத்துழைப்பை வழங்குகின்றது.
முட்டை மற்றும் கோழி இறைச்சி தற்போது மத்திய கிழக்கு மற்றும் மாலை தீவு சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதுடன் எதிர்காலத்தில் இலங்கை நாட்டின் கோழிவளர்ப்பு தயாரிப்புக்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கு எமது நாட்டிலுள்ள கோழிப்பண்ணை உற்பத்தி நிறுவனங்கள் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளன.
மிகவும் திட்டமிடப்பட்ட விதத்தில் செயற்படும் இந்தநாட்டிலுள்ள கோழிப்பண்ணை வர்த்தகம் நவீன தொழில் நுட்பத்தால் பலமடைந்துள்ளதுடன் அரசின் வரி வருமானத்திற்கு உகந்த ஒத்துழைப்புக்களையும் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
1972 ஆம் ஆண்டு வெறும் 100 கோழிக்குஞ் சுகளோடு தரமான மற்றும் சிறந்த படைப்புக்களை சந்தைப்படுத்தி மேலோங்கிநிற்க வேண்டுமென்ற விருப்பத்துடன் நிறுவப்பட்ட க்ரிஸ்ப்ரோ நிறுவனம் இலங்கையின் முதல் மற்றும் அதிநவீன முறையில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்து செங்குத்தாக உயர்ந்திருக்கும் ஒருநிறுவனமாகும்.
இலங்கையில் முதலாவதாக அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி முழுமையாக கணினிமயப்படுத்தி (vertically intergrated) தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.
தமது கடின உழைப்பின்விளைவாக தற்போது பாரிய பண்ணைகள் மற்றும் தீவன ஆலைகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் தாரக மந்திரமானஷ பண்ணையிலிருந்து மேசைகரண்டிவரை| என்ற திட்டமே வெற்றிக்கு காரணியாகும். மேலும் இந்த வெற்றிக்கு நேரடி மற்றும் மறைமுக ஊழியர்கள், வெளிநாட்டவர்கள், உள்நாட்டு விவசாயிகள் மற்றும் இலங்கையிலுள்ள நுகர்வோர் ஆகியோரும் பிரதானகாரணமாக அமைகின்றனர்.