வீதிப் பாதுகாப்பை மேம்படுத்த இலங்கையில் முதன்முறையாக மோட்டார் சைக்கிள்களுக்கென தனிப் பாதை அறிமுகம்

இருசக்கர வாகனங்களால் நிகழும் வீதி விபத்துகளைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இலங்கையின் முதலாவது மோட்டார் சைக்கிள்களுக்கான தனித்துவமான பாதையைக் களுவாஞ்சிக்குடியில் அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

‘100 for 100’ தேசிய பெருநிறுவன மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு திட்டத்தின் தொடக்க விழாவில் உரையாற்றிய அமைச்சர், மோட்டார் சைக்கிள் தொடர்பான விபத்துகள் தொடர்ந்து வீதிப் பாதுகாப்பில் ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளதாகவும், அதற்கு தனியான நடவடிக்கைகள் தேவை என்றும் கூறினார்.

ரப்பர் தடைகள் (rubber dividers) மூலம் ஏனைய போக்குவரத்திலிருந்து பிரத்யேகமாகப் பிரிக்கப்படும் இந்த மோட்டார் சைக்கிள் பாதைக்கான திட்டமிடல் ஏற்கனவே பூர்த்தியடைந்துள்ளதுடன், எதிர்வரும் மாதங்களில் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

மலேசியா உள்ளிட்ட நாடுகளில் மோட்டார் சைக்கிள்களுக்கான தனிப் பாதைகள் விபத்து விகிதத்தை கணிசமாகக் குறைத்துள்ள முன்னுதாரணத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

களுவாஞ்சிக்குடி பகுதியில் அதிகளவிலான மோட்டார் சைக்கிள் பயன்பாட்டாளர்கள் உள்ளதால் இந்த முதற்கட்ட முன்னோடித் திட்டத்திற்காக அப்பகுதி தெரிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்த அமைச்சர், இத்திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இந்த முறையை விரிவுபடுத்த அரசு எதிர்பார்ப்பதாக மேலும் கூட்டினார்.

தேசிய வீதிப் பாதுகாப்பு பேரவை மற்றும் Hayleys Advantis Ltd ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த ‘100 for 100’ எனும் வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத் தொடக்க நிகழ்வின்போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

தனியார் துறையைச் சேர்ந்த 100 நிறுவனங்களை இதில் இணைத்துக்கொண்டு, ஒவ்வொரு நிறுவனத்தின் மூலமாகவும் 100 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகளை வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles