ஐஸ், போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

நாட்டில் இடம்பெற்றுவரும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டம், கந்தப்பளை – ஹைபொரஸ்ட் மஹாவலி குடியிருப்பை சேர்ந்த 58 குடும்பங்களை சேர்ந்த 162 பேர் கடந்த (23) வியாழக்கிழமை முதல் இடம் பெயந்துள்ளனர்.

குறித்த குடியிருப்புக்கு அருகில் ஆபத்தான மரங்கள் சரிந்து விழும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு நலன் கருதி அக்குடியிருப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு 11 குடும்பங்களை சேர்ந்த 45 பேரை தற்காலிகமாக தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் போதிய இடவசதி இன்மையால் ஏனைய 47 குடும்பங்களை சேர்ந்த 117 பேர் உறவினர் மற்றும் அயலவர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

அன்மையில் குறித்த பகுதியில் மூன்று வீடுகளில் மரங்கள் முறிந்து விழுந்து ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றன .

நிலவும் கடும் மழை மற்றும் கடும் காற்றுடன் கூடிய மோசமான காலநிலை காரணமாக எங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள மரங்களும் அதன் கிளைகளும் அருகில் உள்ள வீடுகளுக்கும், உயிருக்கும், உடைமைகளும் பாதிப்பினை விளைவிக்கும் நிலையில் உள்ளது இதனால் இரவு நேரத்தில் நித்திரை கொள்ளாமல் குறித்த பகுதியில் வசிக்கும் அனைவரும் ஒன்றினைந்து வீதியில் நிற்பதே எங்களின் தொடர் கதையாக உள்ளது. அத்துடன், இப்பகுதியிலுள்ள பாரிய மரங்கள் எந்த நேரத்திலும் விழும் அபாயம் காணப்படுவதாக சாரதிகளும் பிரதேசவாசிகளும் சுட்டிக்காட்டுகின்றனர்.

1987ஆம் ஆண்டு குடியேற்றப்பட்ட காலத்திலிருந்து பலத்த காற்றினால் பெரிய மரங்கள் வீடுகள் மீது விழும் அபாயம் உள்ளதாக உரிய அதிகாரிகளுக்கு அறிவித்து எவ்வித பயனும் இல்லை எனவும் குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இது தொடர்பில் வலப்பனை பிரதேச செயலாளரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதையடுத்து, பிரதேச செயலாளரினால் ஆபத்தான மரங்களை அகற்றுமாறு வனவள திணைக்களத்தின் நுவரெலியா மாவட்ட வன அதிகாரிக்கு அறிவித்துள்ளார். ஆனால் பலத்த காற்றுடன் கூடிய மழைக்காலம் வரை அந்த மரங்களை அகற்ற மாவட்ட வன அலுவலர் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துக்கின்றனர்.

எனவே இனி வரும் காலங்களில் மழையுடன் கூடிய பலத்த காற்று வீசினால் ஆபத்தினை ஏற்படுத்தும் வகையில் உள்ள மரங்களை பாரிய அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரத்திணை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுக்கின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles