கடும் காற்றுடன் கூடிய அடை மழையால் பொகவந்தலாவ, டியன்சின் தோட்டத்தில் 14 லயன் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.
இவ்வனர்த்தம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
15ஆம் இலக்க லயன் குடியிருப்பில் 12 வீடுகளும் தொழிற்சாலை பகுதியில்
இரண்டு வீடுகளுமே இவ்வாறு சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்டுள்ள 14 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர், தோட்டத்தில் உள்ள சிறுவர் பாராமரிப்பு நிலையத்தில்
தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று கிராம உத்தியோகத்தர்
ரமேஸ் கண்ணா தெரிவித்தார்.
பொகவந்தலாவ நிருபர் சதீஸ்