கொழும்பு மாநகரசபையின் முதல்வர் வேட்பாளர் யாரென்பதை ஐக்கிய மக்கள் சக்தி இன்று அறிவிக்கவுள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரான நிரோஷன் பாதுக்க தெரிவித்தார்.
‘முதல்வர் வேட்பாளரை தெரிவுசெய்துவிட்டோம். நாளை (இன்று) இது பற்றி அறிவிக்கப்படும். சுமார் 25 வருடகால அனுபவம் அவருக்கு உள்ளது. பெயர்கூட இரண்டு எழுத்துகள்தான்.” – எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, கொழும்பு மாநகரசபையில் தமது கட்சியே ஆட்சி அமைக்கும் என தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
