சஜித் – அநுர விவாதத்தைப் பார்க்க நாட்டு மக்களுக்கு பொது விடுமுறை?

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் விவாதம் நடைபெறும் நாளை அரச விடுமுறை தினமாக அறிவிக்குமாறு ஜனாதிபதியிடம் தான் கோரிக்கை விடுத்தார் என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கிடையில் விவாதம் நடத்தப்படும் எனக் கூறப்படுகின்றது. ஆனால் இருவருமே பின்வாங்கி வருகின்றனர். காதலில் ஈடுபடுபவர்கள்போல் கடிதங்களை பரிமாறிக்கொள்கின்றனர்.

இருவரும் நாட்டை பொறுப்பேற்கும் சவாலை ஏற்காதவர்கள், இவர்களின் திட்டம் என்னவென்பதை அறிய நாட்டு மக்கள் ஆவலவாக உள்ளனர். எனவே, விவாதம் நடத்தப்படும் நாளை விடுமுறை தினமாக அறிவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரியுள்ளேன். அனைவரும் அந்த விவாதத்தை பார்க்க வேண்டும்.” – என்றார்.

அதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் போட்டியிடுவார், இதனை அவர் என்னிடம் உறுதிப்படுத்தியுள்ளார். உரிய நேரத்தில், உரிய வகையில் அறிவிப்பு வெளியாகும் எனவும் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles