சஜித் தலைமையிலான கூட்டணியில் பிரதித் தலைவர் டலஸ்?

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் அமையவுள்ள கூட்டணியில் பிரதித் தலைவர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு வழங்குமாறு சுதந்திர மக்கள் சபை தரப்பில் இருந்து யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியை அமைக்கும் முயற்சியில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஈடுபட்டுள்ளது.

இக்கூட்டணியில் டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையும் இணையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே கூட்டணியின் பிரதித் தலைவர் பதவியை டலஸ் அழகப்பெருமவுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, எனினும், இந்த கோரிக்கைக்கு சஜித் தரப்பில் இருந்து இன்னும் சாதகமான பதில் வழங்கப்படவில்லை என தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles