“சுதந்திரமும் பேச்சுசுதந்திரமும் மக்களுக்கானதாக இருக்க வேண்டும், அதிகாரத்தில் இருப்பவர்களுடன் மட்டுப்படுத்தப்படக்கூடாது”

மருதானையில் நேற்று சுதந்திரத்துக்கான சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது தடுத்து வைக்கப்பட்டிருந்த அமைதியான போராட்டக்காரர்களுக்கு சட்டத்தரணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் கவலை வெளியிட்டுள்ளார்.

சட்ட ஆலோசகரைப் பொலிசார் தடுத்து வைப்பது, சட்டத்தரணிகள் மற்றும் உறவினர்களுக்கு அனுமதி வழங்க வேண்டிய 2018 ஆம் ஆண்டின் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோர் சட்டத்தின் 5ஐ நேரடியாக மீறுவதாக அவர் வலியுறுத்தினார்.

மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு எதிரே சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அமைதியான செயற்பாட்டாளர்கள் குழுவை பொலிஸார் நேற்று இரவு கலைத்துள்ளனர்.

நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ உறுதிப்படுத்தியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், “சுதந்திரமும் பேச்சுசுதந்திரமும் மக்களுக்கானதாக இருக்க வேண்டும், அதிகாரத்தில் இருப்பவர்களுடன் மட்டுப்படுத்தப்படக்கூடாது” என்று மேலும் வலியுறுத்தினார்.

Related Articles

Latest Articles