நாட்டின் நிலையான, தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதாரத்தை நோக்கிய பயணத்திற்கு வலுவான பங்களிப்பை வழங்க முன்வருமாறு தனியார் துறையினருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தேசிய தகவல் தொழில்நுட்ப மற்றும் வணிக செயல்முறை முகாமைத்துவ கண்காட்சியின் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.










