பதிலடி பயங்கரமாக இருக்கும்: காலக்கெடு விதித்த ட்ரம்புக்கு ஈரான் எச்சரிக்கை!

உள்நாட்டு கட்டமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலடியாகப் பயங்கரமான தாக்குதல்களை முன்னெடுப்பதாக ஈரான் எச்சரித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாவிட்டால், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற மிரட்டலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஈரானின் உயர்மட்ட ராணுவத் தலைமையகம் தனது நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் இலக்கு வைக்கப்பட்டால், போர் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் எனக் கூறியுள்ளது.

இந்த மோதல் நிலைப்பாடானது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அதிகப்படியான பதற்றத்தை உலக நாடுகளுக்கு உணர்த்துகிறது. இந்தச் சூழல் ஒருவேளைத் தீவிரமடைந்தால், அது மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் என ஈரான் ஊடகங்கள் எச்சரித்துள்ளன.

 

Related Articles

Latest Articles