தமிழ்த் தேசியக் கட்சிகளின் எம்.பிக்களை நாளை நேரில் சந்திக்கின்றார் ஜனாதிபதி

வெடுக்குநாறிமலை விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் எம்.பிக்களை நாளை புதன்கிழமை முற்பகல் 11:30 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள தமது அலுவலகத்தில் சந்தித்துப் பேசுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தரப்பில் நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறியவந்தது.

இந்த விவகாரத்தை ஒட்டிய விடயங்களை ஜனாதிபதி தரப்புடன் கையாளும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு இந்த நேர ஒதுக்கீடு குறித்து அறிவிக்கப்பட்டிருக்கின்றது. நேற்று மாலை இந்தச் சந்திப்பை நடத்துவதற்கு நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. இந்தச் சந்திப்பு நாளை புதன்கிழமை நண்பகல் நாடாளுமன் றக் கட்டடத் தொகுதியில் நடைபெறும் என அவர் ஏனைய எம்.பிக்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

அனேகமாக தமிழ்த் தேசியக் கட்சிக ளின் எம்.பிக்கள் இந்தச் சந்திப்பில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யின் இரண்டு எம்.பிக்களும் கூட இதில் பங்குபற்றக்கூடும். நாளைய தினம் காலையில் தமக்கு முக்கிய வழக்குகள் கொழும்பு நீதிமன் றங்களில் இருக்கின்றன என்றும், அவை நேரத்துடன் முடிந்தால் தாம் நேரில் வந்து சந்திப்பில் பங்குபற்றுவார் என்றும் ஜனாதி பதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம். பி. நேற்று நீதியரசர் விக்னேஸ்வரனுக்குத் தெரியப்படுத்தினார் என அறியவந்தது.

தப்பித் தவறி நீதிமன்ற விடயம் காரண மாக இந்தச் சந்திப்பில் சுமந்திரன் பங்கு பற்ற முடியாமல் இருக்குமானால், மேற் படி ஜனாதிபதியுடனான சந்திப்பில் வெடுக்குநாறிமலை விடயத்தை ஒட்டி வலியுறுத்தப்பட வேண்டிய விடயங்கள் பற்றிய வழிகாட்டல் குறிப்பு ஒன்றை எழுத்தில் விவரமாக அனுப்பி வைக்கும்படி நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் மின்னஞ்சல் கடிதம் மூலம் சுமந்திரனைக் கோரி யிருக்கின்றார் என்றும் தெரியவந்தது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles