தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்ற வேண்டாம்!

தோட்டத் தொழிலாளர்களுக்கு உண்மையாக சம்பள அதிகரிப்பு மேற்கொள்வதாக இருந்தால், அது தொடர்பான சட்டமூலத்தை சபைக்கு சமர்ப்பிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டு தோட்ட மக்களை ஏமாற்ற வேண்டாம் என எதிர்க்கட்சி உறுப்பினர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) இடம்பெற்ற கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குப்படுத்தல்) (திருத்தச்) சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதாக கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் தெரிவித்து விட்டு அதனை வழங்குவதற்கு 5வருடங்கள் சென்றன. அதேபோன்று தற்போது 1700 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதாக அமைச்சரும் ஜனாதிபதியும் மே தின நிகழ்வில் தெரிவித்திருந்தனர். அதனை நாங்கள் வரவேற்கிறோம்.

எங்களை பொருத்தவரை தொழிலாளர்களுக்கு 1500 ரூபா சம்பளமும் அதற்கு மேலதிகமாக கொடுப்பனவும் வழங்குவதாக இருந்தால் அதனை வரவேற்கிறோம்.

அதேநேரம் தொழிலாளர்களின் சம்பனத்தை ஆயிரம் ரூபாவுக்கு மேல் அதிகரிக்க இணங்கப்போவதில்லை என முதலாளிமார் தெரிவித்திருந்த நிலையில், தற்போது 1200 ரூபா சம்பள அதிகரிப்புக்கு இணக்கம் தெரிவித்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். அப்படியானால் ஏன் 1700 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதாக அறிவிப்பு செய்தீர்கள். முதலாளிமார் சம்மேளனத்துடன் இது தொடர்பாக விரிவாக கலந்துரையாடி ஒரு தீர்மானத்துக்கு வந்த பின்னர் இதனை அறிவிப்பு செய்திருக்க முடியும்.

அவ்வாறு இல்லாமல் மே தினத்தை பயன்படுத்திக்கொண்டு இவ்வாறான அறிவிப்போன்றை செய்வது பொருத்தம் இல்லை. நான் 30 வருடங்களாக அந்த மக்களுடன் இருந்து வருகிறவன். அதனால் அந்த மக்களின் கஷ்டம் எங்களுக்கு தெரியும்.

இவ்வாறு சம்பள அதிகரிப்பு மேற்கொள்வதாக இருந்தால், அது தொடர்பான சட்டமூலத்தை சபைக்கு சமர்ப்பிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு நாங்கள் ஆதரவளிப்போம். மாறாக வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டு தோட்ட மக்களை ஏமாற்ற வேண்டாம்.” -என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles