மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று(15) 100 மில்லிமீட்டர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டை அண்மித்து ஏற்பட்டுள்ள வளிமண்டல தளம்பல் நிலைமை தீவிரமடைவதன் இதற்கு காரணமாகும்.
இதனிடையே, மழையுடனான வானிலை காரணமாக 4 மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று(15) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பதுளை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.