நுவரெலியாவில் – 26, கண்டியில் 52, இரத்தினபுரியில் – 50 பேருக்கும் நேற்று கொரோனா!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை நுவரெலியா மாவட்டத்தில் 381 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்மூலமே இவர்களுக்கு இவ்வாறு வைரஸ் பரவியது.

அத்துடன், கண்டி மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 52 பேருக்கு வைரஸ் தொற்றியது. அம்மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்து 515 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை 819 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று மாத்திரம் 50 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்திலும் நேற்று 26 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles