நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக நேற்று (03.06.2021) மாலை வெளியான அறிக்கையின்படி 4 ஆயிரத்து 602 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களில் 71 பேர் மரணமடைந்துள்ளனர். 3532 குடும்பங்கள் தன்மைப்படுத்தப்பட்டுள்ளன.
அம்பேகமுவ பகுதியில் 863 குடும்பங்களும் கொத்மலை பகுதியில் 750 குடும்பங்களும் ஹங்குரன்கெத்த பகுதியில் 286 குடும்பங்களும் வலப்பனை பகுதியில் 822 குடும்பங்களும் நுவரெலியாவில் 811 குடும்பங்களுமாக மொத்தமாக 3532 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கொரேனா தொற்று உறுதியானவர்களில் அதிகமானவர்கள் அம்பேகமுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் அம்பேகமுவ பகுதியில் 853 பேரும் பொகவந்தலாவ பகுதியில் 586 பேரும் ஹங்குரன்கெத்த பகுதியில் 372 பேரும்கொட்டகலை பகுதயில் 247 பேரும் கொத்மலையில் 366 பேரும் லிந்துலையில் 319 பேரும் மஸ்கெலியா 1740 பேரும்மதுரட்ட பகுதயில் 1200 பேரும் நுவரெலியா மாநகர சபை எல்லைக்குட்பட்டவர்களில் 335 பேரும் புதிய திஸ்பனை பகுதயில் 325 பேரும் நுவரெலியாவில் 347 பேரும் இராகலையில் 277 பேரும் வலப்பனை பகுதியில் 281 பேருமாக மொத்தமாக 4602 பேர் பி.சி.ஆர் பரிசோதனையின் மூலமாக தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.
தொற்றாளர்கள் அதிகம் இனம் காணப்பட்ட பிரதேசமாக மஸ்கெலியா பிரிதேசம் காணப்படுகின்றது.இங்கு 1740 பேர் இனம் காணப்பட்டுள்ளதுடன்.கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த பகுதியில் அநேகமான பெருந்தோட்ட பகுதிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் நுவரெலியா மாவட்டத்தில் 71 பேர் உயிரிழந்துள்ளதுடன்.அதில் அதிகமானவர்கள் நுவரெலியா பகுதியிலேயே உயிரிழந்துள்ளனர்.இங்கு 29 பேர் உயிரிழந்துள்ளனர்.இது தவிர அம்பேகமுவ பகுதியில் 25 பேரும் வலப்பனை பகுதயில் 11 பேரும் கொத்மலையில் 4 பேரும் ஹங்குரன் கெத்த பகுதயில் 2 பேருமாக 71 பேர் உயிரிழந்துள்ளனர்.










