பசறையிலும் பலத்த காற்று : அள்ளுண்டு சென்ற கூரைகள்!

– ராமு தனராஜா

பசறை கனவரல்ல கீழ் பிரிவில் நேற்று (27/09) வீசிய கடும் காற்றின் காரணமாக வீடொன்றின் கூரை முற்றாக சேதமடைந்துள்ளது.

இதன்போது அவ்வீட்டில் வசித்தவர்கள் நேற்றிரவு அயலில் இருந்த உறவினர்கள் வீட்டிலையே தங்கியிருந்தனர். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது அவ்விடத்திற்கு கிராம உத்தியோகத்தர் , பசறை பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர், தோட்ட நிர்வாகம் , மற்றும் பசறை பிரதேச சபை உறுப்பினர் ஈசன் ஆகியோர் அவ்வீட்டை சென்று பார்வையிட்டனர்.

இன்றைய தினம் வீட்டை சிர்த்திருத்துவதற்கான நடவடிக்கைகளை பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக பசறை பிரதேச சபை உறுப்பினர் திரு ஈசன் தெரிவித்தார்

 

Related Articles

Latest Articles