பதுளை மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,814 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, கொரோனாவால் பதுளை மாவட்டத்தில் இதுவரை சுமார் 40 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பசறை பகுதியிலேயே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொவிட் தொற்றனால் உயிரிழந்துள்ளனர்.
71 வயதுடைய நபர் (தந்தை) , 72 வயதுயடைய அவரது மனைவி (தாய்) மற்றும் 22 வயதுடைய மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
தாயும், மகளும் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருந்த நிலையில் தந்தை நேற்று உயிரிழந்துள்ளார்.










