பதுளை மாவட்டத்திலுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சம்பள அதிகரிப்பைக்கோரி இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பதுளையில் உள்ள ஊவா மாகாணசபைக்கு முன்னால் குறித்த போராட்டம் நடைபெற்றுவருகின்றது.
பல வருடங்களாக தமக்கு வேதன உயர்வு வழங்கப்படவில்லை எனவும், அதனை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தியே இப்போராட்டம் இடம்பெறுகின்றது.
பாடசாலைகளில் மாணவர் வருகை தந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
ந. மலர்வேந்தன்










