பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்து வரும் தொழுநோய்

பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் பரவுவது அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொழுநோய் எதிர்ப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய பாடசாலை மட்டத்தில் தொடங்கப்பட்ட நாடு தழுவிய திட்டத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

சுமார் 95% மனிதர்கள் தொழுநோயை ஏற்படுத்தும் பக்டீரியாக்களுக்கான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) தெரிவித்துள்ளது.

நாட்டில் இரண்டு வகையான தொழுநோய் பரவுகிறது, அவை தொற்றக்கூடியவை மற்றும் தொற்றாதவை. துரதிர்ஷ்டவசமாக, இதுவரை கண்டறியப்பட்ட வழக்குகளில் 60% தொற்று வழக்குகள். இது கவலை அளிக்கிறது என டொக்டர் ரணவீர கூறினார்.

நோயாளிகளைக் கண்டறிதல் மேலும் விரிவுபடுத்தப்பட்டு கடந்த மூன்று மாதங்களில்,

500க்கும் மேற்பட்ட தொழுநோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் 126 பேரும், கம்பஹாவில் 114 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 82 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.

Related Articles

Latest Articles