எதிர்வரும் பொதுத்தேர்தலில் கூட்டணியாக கேஸ் சிலிண்டர் சின்னத்தின்கீழ் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபாலடி சில்வா அணி தீர்மானித்துள்ளது.
சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவும், அரசியல் உயர்பீடமும் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில் இன்று கூடியது. இதன்போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலின்போதும் ரணில் விக்கிரமசிங்க தரப்புக்கே நிமல் சிறிபாலடி சில்வா அணி ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.