மலையகத்திற்கான ரயில் சேவையில் தாமதம்

– க.கிஷாந்தன்

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் இன்று மதியம் 1.40 மணியளவில் இங்குருஓயா மற்றும் நாவலப்பிட்டி ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதில் மலையகத்திற்கான புகையிரத சேவை தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த ரயிலின் காட்சிகாண் கூட பெட்டி தண்டவாளங்களை விட்டு விலகியதால் இந்த மலையக ரயில் சேவை தடைப்பட்டுள்ளது.

தற்போது ரயில்வே திணைக்கள அதிகாரிகளினால் ரயில் பெட்டியை தண்டவாளங்களில் நிறுத்தி ரயில் வீதியினை சீர்செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் தடையினை நிவர்த்தி செய்வதற்காக நாவலப்பிட்டியிலிருந்து பாரதூக்கி ரயில் வரவழைக்கப்பட்டு விபத்துக்குள்ளான பெட்டியினை மீண்டும் வழமைக்கு கொண்டு வரப்படும் எனவும், அதன்பின் மலையக ரயில் சேவைகளுக்கான தடை நீங்கும் எனவும் அவ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles