மலையக ஆசிரியர் உதவியாளர்களை, ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குமாறு வலியுறுத்தும் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமாரால் முன்வைக்கப்பட்டுள்ள இப்பிரேரணைமீதான விவாதம் மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகி 5.30இற்கு நிறைவடையும்.