மின்சார சபைக்கு டீசல் விநியோகிக்க இணக்கம்-பெற்றோலிய கூட்டுதாபன தலைவர்

இலங்கை மின்சார சபைக்கு நாளாந்தம் 1,500 மெற்றிக் தொன் டீசலை நாளாந்தம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபன தலைவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்த டீசல் எதிர்வரும் செவ்வாய்கிழமை (18) நாளாந்தம் விநியோகிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, மின் உற்பத்திக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டின் பல பகுதிகளில் நேற்று (13) மின்சார தடை ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

Related Articles

Latest Articles