மீண்டும் கோட்டா நாட்டுக்கு வருகை தருவது பொருத்தமான செயற்பாடாக அமையாது

நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் நிலைமை காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் நாட்டுக்கு வருகை தருவது பொருத்தமான செயற்பாடாக அமையாது என பாதுகாப்பு தரப்பு அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக உள்ளக தகவல்களை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னிலை உறுப்பினர் ஒருவர் இவ்வாறான தகவலொன்று கிடைத்துள்ளதாக குறித்த சிங்கள ஊடகத்துக்கு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பதற்கு வீசா அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த தினத்தில் அல்லது அதற்கு முன்னதாக அவர் நாட்டுக்கு வருகை தரவேண்டியுள்ள நிலையில் அது குறித்து தான் உறுதியாக அறிந்திருக்கவில்லை என குறித்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னிலை உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் உரிய வீசா காலத்திற்கு மேலதிகமாக தங்கியிருப்பது தமது நாட்டுக்கு பாதுகாப்பு பிரச்சினையை உருவாக்கும் என சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என குறித்த முன்னிலை உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை நாட்டில் தற்போதைய நிலைமையின் கீழ் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் நாட்டுக்கு வருகை தருவது பொருத்தமான நடவடிக்கையாக அமையாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச ஊடகமொன்றுக்கு அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles