மைத்திரியுடன் சங்கமிப்பாரா தயாசிறி?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படுமாறு அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

பொதுச்செயலாளர் பதவி அல்லாமல் உப தலைவர் பதவியொன்றை வழங்குவதற்கு அக்கட்சி தயாராகவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.

எனினும், இது தொடர்பில் தயாசிறி தரப்பில் இன்னும் எதுவும் தெரியப்படுத்தப்படவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் தயாசிறி ஜயசேகர, மனிதநேய மக்கள் கூட்டணி எனும் புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles