யார் இந்த ஜே.கே. பாய்? உள்ளாட்சி தேர்தலின்போதே செவ்வந்தி தப்பியோட்டம்: செவ்வந்தி ஒப்பரேஷன் பகுதி – 02

 

இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தப்பியோடுவதற்குரிய ஏற்பாடுகளை செய்த ஜே.கே. பாய் தொடர்பிலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜே.கே. ஆட்கடத்தலுடன் தொடர்புடைய சூத்திரதாரியென சந்தேகிக்கப்படுகின்றது. இவருக்கு நிழல் உலக தாதா கெஹேல்பத்தர பத்மேவுடன் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது.

எனவே, இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாள குழு உறுப்பினர்கள், வடக்கு கடல் பகுதி ஊடாக வெளிநாடுகளுக்கு படகில் தப்பிச்செல்வதற்குரிய ஏற்பாடுகளை இவரே செய்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. அந்த கோணத்திலும் தற்போது விசாரணை இடம்பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டுபாயில் உள்ள நபரொருவர் ஊடாகவே முதலில் ஜே.கே பாய்க்கு பொறி வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அவரை பிடித்தால்தான் செவ்வந்தி பற்றிய தகவல்கள் தெரியவரும் என்பதை பொலிஸார் அறிந்திருந்தனர்.

இதற்கமைய ஜே.கே. பாய் கைது செய்யப்பட்டிருந்தாலும் செவ்வந்தியின் இருப்பிடம் தொடர்பான தகவல்களை ஆரம்பத்தில் அவர் பொலிஸாருக்கு வழங்கவில்லை. அப்போதுதான் இலங்கையில் இருந்து தொலைபேசி அழைப்பொன்று பறந்துள்ளது.

இலங்கையிலுள்ள ஜே.கே. பாயின் குடும்ப விவரம் மற்றும் அவர்கள் இருக்கும் இடங்கள் பற்றி தொலைபேசியில் பாடமெடுக்கப்பட்டுள்ளது. இவற்றை செவிமடுத்து, நெடுநேரம் மௌனம் காத்த ஜே.கே பாய், இஷாராவை தான் ஒப்படைத்த முகவர் பற்றிய தகவலை வழங்கியுள்ளார்.

அந்த முகவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர் ஊடாக நேபாளத்தில் செவ்வந்தி பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் பெறப்பட்டுள்ளது. பின்னர் ஜே.கே. பாய் ஊடாக அழைப்பு ஏற்படுத்தப்பட்டு, செலவுக்கு பணம் வந்துள்ளது, இந்த இடத்துக்கு வா என இடம்பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கமைய செவ்வந்தி மடக்கிபிடிக்கப்பட்டுள்ளார்.

ஜே.கே. பாய் தற்போது சிஐடி விசாரணைப் பொறிக்குள் உள்ளார். எனவே, அவரின் ஆட்கடத்தல் வலையமைப்பு பற்றி தீவிரமாக ஆராயப்பட்டுவருகின்றது.

அதேவேளை, கொலைச்சம்பவம் இடம்பெற்ற பின்னர் 2 மாதங்கள்வரை செவ்வந்தி மத்துகம மற்றும் மித்தெனிய பகுதிகளில் தலைமறைவாகி இருந்துள்ளார். அதன்பின்னரே வெளிநாடு சென்றுள்ளார். உள்ளாட்சிசபைத் தேர்தல் நடந்த மே மாதம் காலப்பகுதியிலேயே அவர் வெளிநாடு தப்பிச்சென்றுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles