ரணகளத்திலும் நட்டத்திர ஹோட்டலில் கிளுகிளுப்பு – யாழில் 19 பேர் சிக்கினர்!

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி யாழ். அல்லைப்பிட்டி பகுதியிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 19 பேர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து 19 பேர் பிறந்தநாள் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக அல்லைபிட்டி பகுதியிலுள்ள குறித்த ஹோட்டலுக்கு நேற்று மாலை சென்றுள்ளனர்.

கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதற்கு அவர்கள் முற்பட்டவேளை, அவ்விடத்துக்கு பொலிஸாருடன் சுகாதார அதிகாரிகள் விரைவந்தனர். அதன்பின்னர் அவர்களை மேற்படி ஹோட்டலிலேயே தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தனர். அனைவரும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

இலங்கையில் தனிமைப்படுத்தல் கால எல்லை 14 நாட்களாகும். ஒரு நாள் கூத்துக்காக 14 நாட்கள் முடங்கியிருக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த பின்னர் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Related Articles

Latest Articles