ஸ்லோவாக்கியா நாட்டு பிரதமர்மீது துப்பாக்கிச்சூடு

ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமர் ராபர்ட் பிகோமீது (வயது 59). துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

தலைநகரில் இருந்து வடகிழக்கே 150 கி.மீ. தொலைவில் உள்ள ஹண்ட்லோவா நகரில் பிரதமர் கூட்டம் ஒன்றை இன்று மதியம் நடத்தினார். இதில், அவருடைய ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆதரவாளர்களுடனான இந்த சந்திப்பின்போது, மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் பிகோவை நோக்கி 4 முறை சுட்டுள்ளார். இதில், பிகோவின் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சுற்றியிருந்தவர்கள் அவரை கார் ஒன்றில் ஏற்றி சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

சந்தேகத்திற்குரிய நபரை பொலிஸார் உடனடியாக கைது செய்தனர். அந்த பகுதியை பொலிஸார் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தாக்குதலை நாடாளுமன்றத்தில் நடந்த கூட்டத்தொடரின்போது, துணை சபாநாயகர் லூபோஸ் பிளாஹா உறுதிப்படுத்தி உள்ளார்.

Related Articles

Latest Articles