🛑 2000 முதல் 2026 வரை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு விபரம்….!
🛑 தோட்டத் தொழிலாளர்களுக்கு 2000 ஆம் ஆண்டில் நாள் சம்பளமாக 121 ரூபா வழங்கப்பட்டுவந்த நிலையில், குறித்த ஆண்டில் 20 ரூபா சம்பள அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.
🛑 2001 ஆம் ஆண்டில் சம்பள நிர்ணய சபை ஊடாக 6 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது.
🛑 2002 ஆம் ஆண்டில் கூட்டு ஒப்பந்தத்தின்கீழ் 26 ரூபா அதிகரிக்கப்பட்டு, நாள் சம்பளமாக 147 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
🛑 2003 ஆம் ஆண்டில் நாள் சம்பளம் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தின்கீழ் நாள் சம்பளம் 47.50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
🛑 2006 ஆம் ஆண்டில் கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் 65.50 ரூபா சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
🛑 2007 ஆம் ஆண்டில் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 30 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது.
🛑 2009 ஆம் ஆண்டில் கூட்டு ஒப்பந்தத்தின்கீழ் 115 ரூபா சம்பள அதிகரிப்பு , தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
🛑 2011 ஆம் ஆண்டில் 110 ரூபா அதிகரிப்பு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது.
2013 இல் கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் 105 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது.
🛑 2014 இல் நிர்ணய சபையால் 284 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது.
🛑 2016 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்த பேச்சு ஊடாக 110 ரூபா சம்பள அதிகரிப்பு தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
🛑 2019 இல் கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் 20 ரூபா சம்பள அதிகரிப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.
🛑 2021 ஆம் ஆண்டில் 150 ரூபா அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.
🛑 2022 இல் வரவு- செலவுத் திட்டம் ஊடாக 100 ரூபா வழங்கப்பட்டுள்ளது.
🛑 2024 ஆம் ஆண்டில் சம்பள நிர்ணய சபை ஊடாக 350 ரூபா அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1,350 ரூபா கிடைக்கப்பெற்றது.
🛑 2026 ஆம் ஆண்டில் வரலாறில் முதன்முறையாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 400 ரூபா சம்பள அதிகரிப்பு இடம்பெற்றது. கம்பனிகள் 200 ரூபாவும், அரசாங்கம் 200 ரூபாவும் வழங்கின.
இதற்கமைய தற்போது நாள் சம்பளமாக 1,750 ரூபா வழங்கப்பட்டுவருகின்றது.
தகவல்மூலம் – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு.
ஆர்.சனத்
raasanath@gmail.com












