” அதிகாரப் பகிர்வுக்கு ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி முழு ஆதரவு வழங்கும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதிகாரப் பகிர்வு தொடர்பில் டிசம்பர் 11 ஆம் திகதிக்கு பின்னர் கூட்டம் நடத்தப்படும் என ஜனாதிபதி இன்று சபையில் அறிவித்தார். இதற்கு ஐக்கிய மக்கள் சக்தி உடன்படுகின்றதா என ஜனாதிபதி மனோ கணேசனிடம் வினவினார்.
இதற்கு பதிலளித்த மனோ,
” ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி இணக்கம். அதனால்தான் நாம் அங்கு இருக்கின்றோம்.” – என்றார்.










