அதிரடிக்கு தயாராகும் பங்காளிகள்! 29 ஆம் திகதி நடக்கபோவது என்ன?

கெரவலப்பிட்டிய ‘யுகதனவி’ மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அரச பங்காளிக்கட்சிகள், இது விடயம் தொடர்பில் மக்களை ஓரணியில் திரட்டவும் திட்டமிட்டுள்ளன.

இதற்காக எதிர்வரும் 29 ஆம் திகதி ‘மக்கள் சபை’ எனும் தொனிப்பொருளின்கீழ் பகிரங்க கூட்டமொன்றை நடத்துவதற்கு மொட்டு அரசுக்கு ஆதரவு வழங்கும் 10 பங்காளிக்கட்சிகள் தயாராகிவருகின்றன.

யுகதனவி விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நேரம் வழங்குமாறு ஜனாதிபதியிடம், பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தாலும், அதனை ஜனாதிபதி நிராகரித்தார். பிரதமர் மற்றும் நிதி அமைச்சருடன் இது சம்பந்தமாக பேச்சு நடத்துமாறும் அறிவுறுத்தியிருந்தார்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மக்கள் மத்திக்கு செல்வதற்கு பங்காளிகள் வியூகம் வகுத்துள்ளன.

Related Articles

Latest Articles