” தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார். இது தொடர்பான அவரின் நிலைப்பாடு மாறவில்லை.” – என்று வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜேர்மன் ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணமல் தொடர்பில் எனக்கு முன்னர் உரையாற்றிய எம்.பி. (வினோ) குறிப்பிட்டிருந்தார். இது பற்றி முதலில் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு இனத்தின் வாக்குகளை மட்டும் இலக்கு வைத்து செயற்படும் நபர் அல்லர். பிரச்சினைக்கு (இனப்பிரச்சினை) அரசியல் தீர்வு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார். இது தொடர்பான அவரின் நிலைப்பாடு மாறவில்லை.
எனவே, மேற்படி நேர்காணலை அடிப்படையாகக்கொண்டு சிங்கள வாக்குகளை மட்டும் இலக்கு வைத்து வெற்றிபெறுவதற்கு ஜனாதிபதி முற்படுகின்றார் எனக் கூறுவது தவறாகும். ” – என்றார்.










