அரசிலிருந்து வெளியேற தயார்! மஹிந்த அதிரடி அறிவிப்பு

அரசில் அங்கம் வகித்தாலும் கட்சியின் சுயாதீனத்தன்மையைக் காட்டிக்கொடுப்பதற்கு நாம் தயாரில்லை. அரசிலிருந்து வெளியேறுவதற்குகூட தயாராகவே இருக்கின்றோம் – என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

அத்துடன், தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் எந்தவொரு முடிவையும் எதிர்கொள்வதற்கு தயார் எனவும் மஹிந்த நேற்று கூறினார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளும், மஹிந்த வழங்கிய பதில்களும் வருமாறு,

கேள்வி – ஜனாதிபதி தேர்தலையா அல்லது பொதுத்தேர்தலையா நீங்கள் கோருகின்றீர்கள்?

பதில் – எதற்கும் நாம் தயார். பொதுத்தேர்தலை வழங்கினால் அதற்கு தயார், ஜனாதிபதி தேர்தல் வைக்கப்படுமானால் அதற்கும் தயார். எனவே, இதில் எமக்கு பிரச்சினை கிடையாது. இரண்டுக்கும் தயாராகவே இருக்கின்றோம்.

கேள்வி – தேசிய வளங்கள் விற்பனை செய்யப்படுவதை கண்டித்துள்ளீர்களே?

பதில் – ஆம், நான் மட்டுமல்ல எமது கட்சியில் உள்ள 95 வீதமானோர் அதே நிலைப்பாட்டில்தான் உள்ளனர்.

கேள்வி – அப்படியானால் இது விடயம் தொடர்பில் அரசு முன்னெடுக்கும் நடவடிக்கையை அனுமதிக்கவில்லையா?
பதில் – அனுமதிக்கவில்லை.

கேள்வி – நீங்களும் அரசில்தானே இருக்கின்றீர்கள்?

பதில் – எமக்கு சுயாதீன உரிமை உள்ளது. அரசில் அங்கம் வகித்தாலும் அந்த சுயாதீன உரிமையை காட்டிக்கொடுக்கவில்லை.

கேள்வி – நீங்கள் விரும்பாத விடயங்கள் இடம்பெற்றால் அரசில் இருந்து விலகவும் தயாரா?

பதில் – நாட்டுக்காக எதற்கும் நாம் தயார்.

 

Related Articles

Latest Articles