அவிசாவளை பகுதியில் தோட்ட இளைஞன் மீது தோட்ட அதிகாரிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் தோட்ட நிர்வாகம் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு, தோட்ட நிர்வாகம் அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துரதிஷ்டவசமாக இடம்பெற்ற சம்பவம் குறித்து தாம் கவனம் செலுத்தியுள்ளதாகவும், இவ்வாறான சம்பவங்கள் இனி வரும் காலங்களில் இடம்பெறாமல் இருப்பதை உறுதி வழங்குவதாகவும் தோட்ட நிர்வாகம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட இளைஞனின் குடும்பத்தினர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானிடம் இந்த சம்பவம் குறித்து முறைபாடு செய்திருந்தனர்.
இதையடுத்து,இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், தோட்ட நிர்வாகத்திடம் விளக்கம் கோரி இருந்தார்.
இந்த நிலையிலேயே, தோட்ட நிர்வாகம் இன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.