முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமரர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெறவுள்ளன.
தான் உயிரிழப்பதற்கு முன்னரே மத்துகம பகுதியில் தனக்கான கல்லறையை பாலித தெவரப்பெரும அமைத்திருந்தார். அந்த இடத்திலேயே அவரின் பூதவுடல் இன்று பிற்பகல் 2 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
பாலித தெவரப்பெருமவின் பூதவுடல் அஞ்சலிக்காக அவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பெருந்திரளான மக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.