ஆஸி. அணியை பந்தாடி தொடரை வென்றது இலங்கை!

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான நான்காவது
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 4 ஓட்டங்களால் வெற்றுபெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரையும் அவ்வணி கைப்பற்றியது.

இரு அணிகளுக்குமிடையிலான இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆஸி. அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி, 49 ஓவர்களில் சகல விக்கெட்டுகளை இழந்து 258 ஓட்டங்களை பெற்றது. அசலங்க சதமடித்து அசத்தினார். தனஞ்ச டி சில்வா 60 ஓட்டங்களை பெற்றார்.

பின்னர் 259 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளை இழந்து 254 ஓட்டங்களை பெற்றது. இதன்படி இலங்கை அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

5 போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடரை 3-1 என்ற அடிப்படையில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. 5 ஆவது போட்டி மட்டுமே எஞ்சியுள்ளது.

Related Articles

Latest Articles