பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு வழங்க முடியாது என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தம்முடன் கலந்துரையாடப்படவில்லை எனவும், அரசியல்வாதிகள் இருக்கையில் மக்களை வீதிக்கு இறக்கி வஞ்சிக்கும் செயலை ஏற்கமுடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
தொழிற்சங்கங்களை கண்டால் நடுங்கும் கம்பனிகள், இன்று ஏதேச்சாதிகாரமாக செயற்படுவதற்கு யார் காரணம் என்பது பற்றியும் ஆராய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“ தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுத்தர வேண்டியது தொழிற்சங்கங்களின் பொறுப்பாகும். எனவே, மக்களை வீதிக்கு இறக்கி முன்னெடுக்கப்படும் நகர்வுகளை ஆதரிக்க முடியாது.” – எனவும் வடிவேல் சுரேஷ் எம்.பி. மேலும் கூறியுள்ளார்.
ராமு தனராஜ்