இன்றும் மழை பெய்யும் – மண்சரிவு எச்சரிக்கையும் நீடிப்பு!

மேல்,  சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்று (21) இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி நாடளாவிய ரீதியில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும் என்றும், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில்   50 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யக்கூடுமெனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன், இடி, மின்னல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டளவியல் திணைக்களம் கூறியுள்ளது.

அதேவேளை, கொழும்பு, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று பிற்பகல் ஒரு மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles