இராஜாங்க அமைச்சர் பயணித்த வாகனம் பண்டாரவளையில் தீ பிடித்தது…

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க பயணித்த வாகனம் பண்டாரவளை, ஹல்பே பகுதியில் வைத்து தீப்பற்றி எரிந்துள்ளது.மஹியங்கனை பகுதியில் இருந்து எல்ல நோக்கி பயணித்துக்கொண்டிருக்கையிலேயே இன்று அதிகாலை 12.45 மணியளவில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

எனினும், இத்தீ விபத்தில் இராஜாங்க அமைச்சருக்கோ அல்லது சாரதிக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

பண்டாரவளை மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர், எல்ல பொலிஸார் மற்றும் பிரதேச வாசிகள் இணைந்து தீயை அணைத்தனர்.

தகவல்மூலம்  -Accident 1st

Related Articles

Latest Articles