இரு மாதங்களுக்குள் புதிய அரசமைப்புக்கான சட்டமூலம் முன்வைப்பு

புதிய அரசியலமைப்புக்கான ஆரம்ப சட்டமூலம் இன்னும் இரு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பை இயற்றும் பணிகள் தற்போது எந்தக்கட்டத்தில் உள்ளன என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயெ அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் நீதி அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,” புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்குவதற்காக நிபுணர்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தகுழு தற்போது கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் சம்பந்தமாக கவனம் செலுத்தியுள்ளது.

இதன்படி இன்னும் ஒரிரு மாதங்களுக்குள் புதிய அரசியலமைப்புக்கான ஆரம்ப சட்டமூலத்தை அக்குழுவினர் கையளிப்பார்கள். அதன்பின்னர் குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.” – என்றார்.

அதேவேளை, தான் ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டாவது வருடம் முடிவடைவதற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு இயற்றப்படும் என்று உறுதிமொழியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles