இலங்கையில் இருந்து வெற்றிலை, வாழைப்பழம், பனங்கிழக்குடன் சிட்னி சென்றவருக்கு அபராதம்

கடந்த மாதம் ஐந்து நாள் இடைவெளியில் ஆஸ்திரேலியாவின் உயிரியல் பாதுகாப்புச் சட்டங்களை மீறி, தடைசெய்யப்பட்ட பொருட்களை நாட்டுக்குள் எடுத்துவர முயன்ற 4 பயணிகளுக்கு அதிகபட்சமாக தலா $5,500 அபராதம் விதிக்கப்பட்டது.

இவர்களில் பனங்கிழங்கு, வாழைப்பழம், வெற்றிலை, ஒடியல் மாவு, தாவரத் தண்டுகள் உள்ளிட்ட பொருட்களுடன் இலங்கையிலிருந்து சிட்னி வந்த பயணியும் அடங்குவதாக விவசாயம், மீன்பிடி மற்றும் வனவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த நபர் கடந்த மே 16ம் திகதி சிட்னி விமான நிலையத்தை வந்தடைந்ததாகவும், இவருக்கு சுமார் 5500 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Latest Articles