‘இலங்கையில் 196 பேருக்கு கொரோனா தொற்று’

இலங்கையில் மேலும் 196 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வந்த வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் மற்றும் அதன் ஊழியர்கள் உட்பட 450 பேரிடம் மேற் கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவர்களில் மேலும் 196 பேருக்குக்கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரையில் 337 பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. நேற்றைய தினமும் 56 பேர் அடையாளம் காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 252 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles