இலங்கை அரசியலில் தலையிட வேண்டிய தேவைப்பாடு இந்தியாவுக்கு கிடையாது என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொனசேக்கா தெரிவித்தார்.
‘ இந்தியா போன்ற பெரிய நாடுகளுடன் செய்து கொள்ளப்படும் பொருளாதார ஒப்பந்தங்கள் இலங்கiயை போன்ற மிகச் சிறிய நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது.
எனவே இந்தியா – பாக்கிஸ்தான் மோதல் ஏற்பட்டால் அது எமது நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை செலுத்தாது.” – எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.
இலங்கை என்பது செல்வந்த நாடல்ல. மக்கள் மூன்று வேளை உணவை உண்பதற்கு கூட சிரமத்தையே எதிர்கொள்கின்றனர். இது வரலாற்று ரீதியாக எமது நாட்டில் காணப்படும் பிரச்சினையாகும்.
இந்த நிலைமையிலிருந்து இலங்கை மீட்சியடைந்தால் சிறப்பு. ஆனால் அதற்கான எந்த சமிஞ்ஞையும் இதுவரையில் தென்படவில்லை.
இலங்கை மக்கள் இன்னும் அனுபவிப்பதற்கு என்ன துயரம் இருக்கிறது? அனைத்தையும் எமது மக்கள் பார்த்து விட்டனர். எந்த நாட்டுடன் எந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டாலும் இலங்கையின் இறையான்மை பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்தியா என்பது உலகிலுள்ள மிகப்பெரிய நாடுகளில் நான்காவது இடத்திலுள்ள நாடாகும். எனவே அந்த நாடு வளர்ச்சியடைவதற்கு இலங்கை போன்ற மிகச் சிறிய நாடுகளின் அரசியலில் தலையிட வேண்டியேற்படும் என்று நான் எண்ணவில்லை. அவர்களுக்கு அதற்கான தேவைப்பாடும் இல்லை.” – என பொன்சேகா மேலும் குறிப்பிட்டார்.










