இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின நிகழ்வுகள் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் கொட்டகலை CLF வளாக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.
உலகளாவிய ரீதியில் சர்வதேச மகளிர் தினம் கடந்த 8ம் திகதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மகளிர் தினம் இன்றைய தினம் பெண்களின் பல்வேறு பாரம்பரிய கலை,கலாச்சார நிகழ்வுகளுடன் மற்றும் விவாத போட்டிகளும் இடம்பெற்றது.
இதன்போது வருகை தந்திருந்த இ.தொ. கா வின் மூத்த தோட்ட தலைவிகளுக்கு அமைச்சரினால் பரிசில்களும் வழங்கப்பட்டன.
இதன்போது கலந்துகொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், காங்கிரஸின் வளர்ச்சிக்கு மூத்த தலைவர் மற்றும் தலைவிகளின் பங்கு எப்போதும் அவசியம் அத்தோடு இனிவரும் காலங்களில் காங்கிரஸின் மாவட்ட காரியாலயங்களில் மூத்த தலைவர்களுக்கு காரியாலயத்தில் சென்று ஆலோசனைகளை வழங்குவதற்கான ஆயத்தங்களை மேற்கொள்கிறோம்.
இந்நிகழ்வில் இ.தொ.கா வின் பிரதித்தலைவர் அனுஷா சிவராஜா, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மருதுபாண்டி ராமேஸ்வரன், உபதலைவர்கள், நகர பிரதேச சபை தலைவர்கள், மூத்த தலைவிகள், இ.தொ.கா வின் காரியாலய இணைப்பதிகாரிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.



