‘இலங்கைக்கு முழு ஒத்துழைப்பு’ – ஜனாதிபதியிடம் ஐ.நா.செயலர் உறுதி

ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பேச்சு நடத்தியுள்ளார்.

ஐ.நாவின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்குவதாக ஐ.நா. பொதுச்செயலாளர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி திட்டம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதேவேளை, உள்ளகப் பொறிமுறையினூடாகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, புலம்பெயர் தமிழர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை, இலங்கை உள்ளக விசாரணையில் தோல்வி கண்டுவிட்டதாகவும், சர்வதேச விசாரணைப் பொறிமுறையே அவசியம் எனவும் சர்வதேச அமைப்புகளும் வலியுறுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles