உள்ளாட்சி தேர்தல் பிற்போடப்படுமா?

எல்லை நிர்ணயத்தின் பின்னர் தேர்தல் நடத்தப்பட்டால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மேலும் 6 மாதங்களுக்கு பிற்போடப்படும் என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி அரசியல் கட்சிகளுடன் எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகார வரம்புகளை வரையறுக்கும் வகையில் கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன இந்த எல்லை நிர்ணய குழுவை நியமித்தார்.

தற்போதைய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5 ஆயிரத்து 100 முதல் 5 ஆயிரத்து 200 வரை குறைக்க முடியும் என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles