” 2019 இல் இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் கத்தோலிக்க மக்கள் உட்பட பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்.”
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
” 15 வயதில் இருந்து பைபல் வாசித்தவன் நான். எனது ஆட்சிகாலத்தில், வேறு நபர்கள் இழைத்த தவறால் இப்படியொரு சம்பவம் இடம்பெற்றது. அதற்காக பாதிக்கப்பட்ட மக்களிடமும், உயிரிழந்தவர்களின் உறவினர்களிடமும், கத்தோலிக்க மக்களிடமும் மன்னிப்பு கோருகின்றேன்.
நான் தவறிழைக்கவில்லை. நீதிமன்ற தீர்ப்பிலும் இது உறுதியானது. என்னால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள்தான் தவறிழைத்தனர். அதற்கு நான் பொறுப்பு கூற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
என்னை முடக்க முடியாது. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்.” – எனவும் மைத்திரி குறிப்பிட்டார்.










