ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, யாழ்ப்பாணத்தில் வைத்து தமிழிழ் பாட்டு பாடி, கட்சி ஆதரவாளர்களை மகிழ்வித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
அதனை தொடர்ந்து உள்ளூர் ஆட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கருத்தமர்வும் இடம்பெற்றது.
இதன்போதே ” ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்…” என்ற பாடலை பாடி, மண்டபத்தில் இருந்தவர்களை மகிழ்வித்தார் தயாசிறி.










