சஜித் அணி எம்.பிக்கள் அரசுடன் இணைகின்றனரா? அஜித் எம்.பி. மறுப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணையப் போவதில்லை என்று அக்கட்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அஜித் பி பெரேரா எம்.பி. தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, அரசாங்கத்துடன் இணையவுள்ளார் என வெளியான தகவல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” தேசிய மக்கள் சக்தி அரசாங்கமென்பது மூழ்கும் கப்பலாகும். அவ்வாறு மூழ்கும் கப்பலில் ஏறுவதற்கு நாம் தயாரில்லை.

ஹர்ஷ டி சில்வா அல்ல ஐக்கிய மக்கள் சக்தியில் எந்தவொரு உறுப்பினரும் இந்த அரசாங்கத்தில் பதவிகள் வகிக்கபோவதில்லை.

எவ்வாறான அழைப்புகள் விடுக்கப்பட்டாலும் ஹர்ஷ டி சில்வா அரசாங்கத்தில் எவ்வித பதவியையும் வகிக்கமாட்டார்.

தேர்தல் காலத்தில் தங்களை மலர்கள் எனவும், எதிரணியை புற்கள் எனவும் தேசிய மக்கள் சக்தியினர் விமர்சித்தனர்.

ஆனால் தாங்கள் மலர்கள் என்பதை தற்போது அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.”– எனவும் அஜித் பி பெரேரா குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles